செய்திகள்
சேரன்மாதேவி பகுதியில் 17-ந் தேதி மின்தடை
சேரன்மாதேவி பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் 17-ந் தேதி மின்வினியோகம் இருக்காது.
சேரன்மாதேவி:
மேலக்கல்லூர், கரிசல்பட்டி, சேரன்மாதேவி ஆகிய துணை மின்நிலையங்களில் வருகிற 17ந் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
எனவே இங்கு இருந்து மின்வினியோகம் பெறும் மேலக்கல்லூர், சுத்தமல்லி, சீதபற்பநல்லூர், சங்கன்திரடு ஆகிய பகுதிகளுக்கு அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியாளர்குடியிருப்பு, பட்டன்காடு, இடையன்குளம், கங்கணாங்குளம், சடைய மான்குளம், வெங்கட் ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூர், காடுவெட்டி, கீழஉப்பூரணி, சேரன்மாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச் செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், கரி சூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம் ஆகிய பகுதிகளுக்கு அன்றையதினம் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின்தடை செய்யப்படும் என கல்லிடைக்குறிச்சி மின்வினியோக செயற் பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.