செய்திகள்
கோயம்பேடு மார்க்கெட்

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை சரிவு

Published On 2019-07-29 08:22 GMT   |   Update On 2019-07-29 08:22 GMT
கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து அதிகம் காரணமாக காய்கறி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
போரூர்:

கோயம்பேடு காய்கறி மார்கெட்டிற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடக, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் தினசரி விற்பனைக்கு வருகிறது.

வறட்சி காரணமாக கடந்த சில மாதங்களாக காய்கறி வரத்து பாதியாக குறைந்ததால் விலை அதிகரித்து காணப்பட்டது.

தற்போது வரத்து அதிகம் காரணமாக காய்கறி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 1 கிலோ ரூ. 70-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பாகற்காய் ரூ.40-க்கும், ரூ. 60-க்கு விற்ற அவரைக்காய் ரூ.40-க்கும், ரூ.30-க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.20-க்கும் ரூ.50-க்கு விற்ற பச்சை மிளகாய் தற்போது ரூ.25-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து காய்கறி மொத்த வியாபாரி பெருமாள் ரெட்டி என்பவர் கூறும்போது, “தற்போது ஆடி மாதம் தொடங்கி உள்ளதால் திருமண முகூர்த்த நாட்கள் ஏதும் கிடையாது. மேலும் காய்கறி வரத்து 250 லாரிகளில் இருந்து தற்போது 350 லாரிகள் வரை கோயம்பேடு சந்தைக்கு விற்பனைக்கு வருவதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது” என்றார்.

கோயம்பேடு மார்கெட்டில் காய்கறி விலை விபரம் (ஒரு கிலோவில்) வருமாறு:-

தக்காளி - ரூ. 30
வெங்காயம் - 18
சி.வெங்காயம் - 50
உருளைக்கிழங்கு - 15
கத்தரிக்காய் - 20
பீன்ஸ் - 60
முட்டை கோஸ் - 12
கேரட் - 40
பச்சை மிளகாய் - 25
வெண்டைக்காய் - 20
கொத்தவரங்காய் - 20
அவரைக்காய் - 40
இஞ்சி - 140
பீட்ரூட் - 20
மாங்காய் - 50
முருங்கைக்காய் - 50
கோவக்காய் - 20
பாகஸ்காய் - 40
வெள்ளரிக்காய் - 15
Tags:    

Similar News