செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புகளையும் தமிழில் வெளியிட வேண்டும் - மத்திய மந்திரிக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்

Published On 2019-07-19 21:21 GMT   |   Update On 2019-07-19 21:21 GMT
சுப்ரீம் கோர்ட்டை போன்று சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புகளையும் தமிழில் வெளியிட வேண்டும் என மத்திய மந்திரிக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பி உள்ளார்.
சென்னை:

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்பட்டதற்கு நன்றி தெரிவித்து மத்திய சட்டம், நீதி, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத்துக்கு, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகளை தமிழ் மற்றும் பிற மாநில மொழிகளில் வெளியிடுவதற்கான முன்னோடியான நடவடிக்கை எடுத்ததற்காக தமிழக மக்கள் சார்பில் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தீர்ப்புகளை மக்கள் சிறப்பாக புரிந்துகொள்வதை உறுதி செய்து, நீதித்துறை செயல்பாடுகளுக்கு அருகே அவர்களை அழைத்துச்செல்வதற்கு இது நீண்டகால நடவடிக்கையாக அமையும். இதேபோல சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புகளையும் தமிழில் வெளியிடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News