செய்திகள்
கைது

தேனி அருகே மருமகளுக்கு பாலியல் தொல்லை- மாமனார் கைது

Published On 2019-07-10 09:05 GMT   |   Update On 2019-07-10 09:05 GMT
தேனி அருகே மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார் கைது செய்யப்பட்டார்.
உத்தமபாளையம்:

தேனி அருகே உத்தமபாளையம் ராயப்பன்பட்டி காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி இவரது மகனுக்கும் மருமகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் அவரது மருமகள் கோபித்துக் கொண்டு தூத்துக்குடியில் உள்ள சகோதரர் வீட்டுக்கு சென்று விட்டார்.

அவர்களின் 2 குழந்தைகளும் அந்தோணி சாமி பராமரிப்பில் இருந்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் அந்தோணி சாமி மகன் இறந்து விட்டார். இதனால் ராயப்பன்பட்டிக்கு வந்த அவரது மருமகள் வாரிசு சான்று மற்றும் உதவித் தொகை பெறுவதற்காக அங்கேயே தங்கியுள்ளார்.

இதனை பயன்படுத்தி அந்தோணி சாமி அவரது மருமகளிடம் தவறாக நடக்க முயன்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அவரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றார். இந்த வி‌ஷயத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இது குறித்து ராயப்பன் பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தோணி சாமியை கைது செய்தனர்.
Tags:    

Similar News