செய்திகள்

நாமக்கல் பஸ் நிலையத்தில் வி‌‌ஷம் குடித்த காதல்ஜோடி பலி

Published On 2019-06-22 16:37 GMT   |   Update On 2019-06-22 16:37 GMT
நாமக்கல் பஸ் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வி‌‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற காதல்ஜோடி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.
நாமக்கல்:

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புலியாம்பாறை கிராமத்தை சேர்ந்தவர் கிரு‌‌ஷ்ணன். இவரது மகன் செந்தூரான் (வயது 24). இவரும் திருச்சி மாவட்டம் பூலியாம்பாளையம் பகுதியை சேர்ந்த அஞ்சலியும் (20) திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

அப்போது இருவரும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் இருவரும் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கிடையே கடந்த 18-ந் தேதி திருச்சியில் இருந்து நாமக்கல் வந்த காதல்ஜோடியினர், நாமக்கல் பஸ் நிலையத்தில் வி‌‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். பின்னர் இருவரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று செந்தூரான் மற்றும் அஞ்சலி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News