செய்திகள்

ஆழியார் வண்ண மீன் காட்சியகத்தில் 6 ஆமைகள் பறிமுதல் - ஊழியரிடம் விசாரணை

Published On 2019-06-19 12:27 GMT   |   Update On 2019-06-19 12:27 GMT
ஆழியார் பகுதியில் உள்ள தமிழ்நாடு மீன் வளர்ச்சி காட்சியகத்தில் 6 ஆமைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி:

ஆழியார் பகுதியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் வண்ண மீன்காட்சியகம் உள்ளது. இங்கு வைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான மீன்களை பொதுமக்கள் பார்வையிட்டு வருகிறார்கள். இந்த வண்ண மீன் காட்சியகத்தில் அழிந்து வரும் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் 2 நட்சத்திர ஆமைகள் உள்பட 6 ஆமைகள் வைத்து இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று 6 ஆமைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக மீன் வளர்ச்சி கழக ஊழியர் ஒருவரையும் விசாரணைக்காக வனத்துறையினர் அழைத்து சென்றனர். விசாரணையில் நெஞ்சாலை துறை ஊழியர் ஒருவர் இந்த ஆமைகளை கொடுத்ததாக தெரியவந்தது.
Tags:    

Similar News