செய்திகள்

திருப்பூர் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவி மரணம்

Published On 2019-06-19 08:55 GMT   |   Update On 2019-06-19 08:55 GMT
திருப்பூர் தனியார் பள்ளியில் வகுப்பறையில் மயங்கி விழுந்து 10-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மகள் வர்ஷா (15). இவர் திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று வழக்கம் போல் மாணவி வர்ஷா பள்ளிக்கு வந்தார். வகுப்பறையில் அமர்ந்து சக மாணவிகளுடன் படித்துக் கொண்டிருந்தார்.

அப்போது மாணவி வர்ஷா திடீரென தலைசுற்று ஏற்பட்டு கீழே மயங்கி விழுந்தார்.

அதிர்ச்சியடைந்த ஆசிரியர் மற்றும் சக மாணவர்கள் வர்ஷாவை மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்மாணவி இறந்துவிட்டதாக கூறினார்.

இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News