செய்திகள்

தந்தையுடன் சென்றபோது மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவி பலி

Published On 2019-06-13 06:27 GMT   |   Update On 2019-06-13 06:27 GMT
திருவள்ளூர் அருகே தந்தையுடன் சென்றபோது மோட்டார் சைக்கிள்ல விபத்தில் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் கீர்த்திகா (19). இவர் திருப்பாச்சூரில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார்.

இன்று காலை கீர்த்திகா தந்தை சீனிவாசனுடன் மோட்டார் சைக்கிளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்றனர்.

புல்லரம்பாக்கம் கிருஷ்ணா கால்வாய் அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் திடீரென சீனிவாசனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீர்த்திகா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

சீனிவாசன் படுகாயம் அடைந்தார். அவருக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து நடந்ததும் மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர்கள் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News