செய்திகள்
பள்ளிபாளையம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி மாணவர் பலி
பள்ளிபாளையம் அருகே காவிரி ஆற்றில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி மாணவன் மைக்கேல்ராஜ் பரிதாபமாக இறந்தார்.
பள்ளிபாளையம்:
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே காக்காபாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் மைக்கேல்ராஜ் (வயது 18). இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு ஐ.டிஐ. படித்து வந்தார்.
இந்தநிலைலயில் நேற்று முன்தினம் பள்ளிபாளையம் அருகே உள்ள பட்லூர் பகுதிக்கு கேட்டரிங் வேலைக்கு மைக்கேல்ராஜ் வந்தார். நேற்று வேலை முடித்துவிட்டு பட்லூர் காவிரி ஆற்றில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி மைக்கேல்ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருச்செங்கோடு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மைக்கேல்ராஜ் உடலை மீட்டனர். பின்னர் அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக மொளசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே காக்காபாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் மைக்கேல்ராஜ் (வயது 18). இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு ஐ.டிஐ. படித்து வந்தார்.
இந்தநிலைலயில் நேற்று முன்தினம் பள்ளிபாளையம் அருகே உள்ள பட்லூர் பகுதிக்கு கேட்டரிங் வேலைக்கு மைக்கேல்ராஜ் வந்தார். நேற்று வேலை முடித்துவிட்டு பட்லூர் காவிரி ஆற்றில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி மைக்கேல்ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருச்செங்கோடு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மைக்கேல்ராஜ் உடலை மீட்டனர். பின்னர் அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக மொளசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.