செய்திகள்

படைவீடு அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2019-06-06 18:20 GMT   |   Update On 2019-06-06 18:20 GMT
படைவீடு அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
நாமக்கல்:

குமாரபாளையம் அருகேயுள்ள படைவீடு அரசு உயர் நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 2019-2020-ம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதையொட்டி மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு பள்ளியின் தலைமையாசிரியர் பிரபாகர் தலைமை தாங்கி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊர்வலத்தில் பள்ளியின் தொடர் சாதனை, கடந்த 6 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி, பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகள், அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதன் பயன்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்து கூறப்பட்டது.
Tags:    

Similar News