search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணர்வு ஊர்வலம்"

    • போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
    • வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்

    ராணிப்பேட்டை:

    ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் ஊழல் தடுப்பு வாரத்தை முன்னிட்டு ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கியது.

    ஊர்வலத்தை ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப் பிரண்டு கிரண்ஸ்ருதி கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 3000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். ஊர்வலம் நவல்பூர், கெல்லீஸ் ரோடு என நகரின் முக்கிய வீதிகளின் வழியாக மாணவ-மாணவிகள் ஊழலுக்கு எதிரான விழிப்பு ணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந் தியவாறு சென்றனர்.

    இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்ரமணியம், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்
    • பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ந்தேதியை ஒவ்வொரு ஆண்டும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் அனுசரித்து வருகிறது.

    நேற்று ராணிப்பேட்டையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    ஊர்வலத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த ஊர்வலம் ராணிப்பேட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. ஊர்வலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ்உள்பட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஸ் நிலையம் அருகே லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி தலைமையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணி பஸ் நிலையம் தொடங்கி சிஎல் சாலை வழியாக வாரசந்தை மைதானம் வரை நடைபெற்றது.

    இதில் சப் இன்ஸ்பெக்டர்கள் கணேசன், பிரகாஷ் மற்றும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
    • ஊர்வலத்தை கலெக்டர் கார்மேகம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    சேலம்:

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. ஊர்வலத்தை கலெக்டர் கார்மேகம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக அரசு நிலத்தடி நீர்மட்டத்தினை உயர்த்தவும், நீர் மேலாண்மைக்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் மழைநீரை வீணாக்காமல் அவர்களுடைய இல்லங்களில் சேகரிக்க வேண்டும்.

    பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்னதாக தங்கள் வீடுகளில் உள்ள மொட்டை மாடியை சுத்தப்படுத்த வேண்டும். மழைநீர் வடிக்குழாய்களில் அடைப்பு மற்றும் துவாரங்களை சரி செய்வதுடன், வடிகட்டும் தொட்டிகளில் உள்ள கூழாங்கல் மற்றும் கருங்கல் ஜல்லிகளை சுத்தம் செய்து மீண்டும் நிரப்ப வேண்டும்.

    வருகிற 22-ந் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் கட்டாயம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்த வேண்டும். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நன்றாக பராமரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    துண்டு பிரசுரங்கள்

    மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு தொடர்பான குறும்படத்தினை கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்து பார்த்தார். கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் திருவள்ளுவர் சிலை, மாநகராட்சி அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி வழியாக மீண்டும் கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தது. இதில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ, மாணவிகள் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் செல்வராஜ், துணை மேற்பார்வை பொறியாளர் ஜெயகொடி, துணை நிலநீர் வல்லுனர் கல்யாணசுந்தரம், உதவி நிர்வாக பொறியாளர் கல்யாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் வளர்மதி தொடங்கி வைத்தார்
    • மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நகரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கிராம குடிநீர் திட்டக் கோட்டம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்து மாணவர்கள், மகளிர் குழுக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் மாவட்டம் முழுவதிலும் மழைநீர் சேகரிப்பு குறித்து குறும்படங்கள் ஒளிபரப்பும் வகையில் மின்னனு காணொளி வாகன பிரச்சார தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி கொடி அசைத்து, ஊர்வலத்தையும், வாகன பிரச்சாரத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நகரமன்றத் தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உதவி நிர்வாகப் பொறியாளர் குமரவேல், துணை நில நீர் வல்லுநர் மணிமேகலை, உதவி பொறியாளர் ஜெ யப்பிரியா, உதவி கணக்கு அலுவலர் நடராஜன் மற்றும் பொதுமக்கள், மகளிர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • சென்னிமலை நகரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    • ஊர்வலத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்ட கைத்தறி துறை சார்பாக 2005-ம் வருடம் இயற்றப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னிமலை நகரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    சென்னிமலை பார்க் ரோட்டில் தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தினை கைத்தறி கட்டுப்பாடு அலுவலர் எம்.அன்புக்கரசி தொடங்கி வைத்தார்.

    சென்னிமலை நகரின் நான்கு ராஜ வீதி, காங்கேயம் ரோடு, பஸ் நிலையம் வழியா வலம் வந்த இந்த ஊர்வலம் அப்பாய் செட்டியார் வீதியில் உள்ள சென்டெக்ஸ் நிறுவனத்தில் நிறைவு பெற்றது.

    இந்த ஊர்வலத்தில் சென்னிமலை பகுதியில் செயல்படும் பிரதம கைத்தறி கூட்டுறவு சங்க பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து ெகாண்டனர்

    செய்யாறு:

    செய்யாறு டவுன், ஆரணி கூட்ரோட்டில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் சிறுதானிய விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் மோகனவேல் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், நகர செயலாளர் வழக்கறிஞர் கே.விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒ.ஜோதி எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன், உணவு பாதுகாப்பு அலுவலர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர் ஞானவேல், சின்னதுரை, ராம் ரவி, துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    • இதில் மாணவ- மாணவிகள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்து பனையம்பள்ளி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    இந்த ஊர்வலம் பவானிசாகர் சாலை வழியாக சென்றது. இதில் மாணவ- மாணவிகள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

    தமிழ்நாட்டின் மொத்த மேம்பாட்டிற்கு மற்றும் தாய்மார்களின் நல் வாழ்வி ற்கும் குழந்தைகளின் ஒளி மயமான எதிர்கா லத்திற்கும் திருமணத்திற்கு ஏற்ற வயது முதல் குழந்தையை தாம தப்படுத்தி மேற்கொள்ள வேண்டிய குடும்ப நல முறைகள் எடுத்துரைக்கப் பட்டன.

    மக்கள் தொகை பெருக்க த்தினால் ஏற்படும் தாக்க த்தை குறைத்தல், சுற்று ச்சூழல் பாதிப்பை தடுத்தல், மரம் வளர்ப்பதை ஊக்கு வித்தல், வறுமை ஒழிப்பு குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் எடுத்து கூறப்பட்டது.

    குடும்பத் திட்டங்களை மக்கள் இயக்கமாக மலரச் செய்ய என்னை நான் முழுமையாக அர்ப்பணி த்துக் கொள்வேன் என உள்ளிட்ட உறுதிமொழிகளை மாணவ- மாணவிகள் ஏற்றனர்.

    மேலும் என்னுடைய இந்த முயற்சிகள் வெற்றி யடைய இயற்கை எனக்கு துணை நிற்கட்டும் என சுதந்திர அமுத பெரு விழாவினை கொண்டாடி மகிழ்வோம் மற்றும் குடும்ப நல உறுதிமொழி ஏற்று வளம் பெறுவோம் என பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கோஷங்களை எழுப்பி ஊர்வ லமாக சென்று பள்ளியை வந்து அடைந்தனர்.

    • மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சார்பில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
    • அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்த பேரணிக்கு, மேட்டூர் தாசில்தார் முத்துராஜா தலைமை வகித்தார்.

    மேட்டூர்:

    மேட்டூரில், மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சார்பில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

    மேட்டூர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்த பேரணிக்கு, மேட்டூர் தாசில்தார் முத்துராஜா தலைமை வகித்தார். அரசு கலை கல்லூரி வளாகம் அருகே தொடங்கிய பேரணி, மாதா கோவில், மேட்டூர் நீதிமன்றம், எம்.எல்.ஏ அலுவலகம் வழியாக மீண்டும் கல்லூரி வளாகத்தைச் சென்றடைந்தது. இதில் மேட்டூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி மற்றும் மதுவிலக்கு போலீசார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • போலீசார் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் உலக போதை பொருள் தடுப்பு தின நிகழ்ச்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, போதை மருந்து பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசினார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி முன்னிலை வகித்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் அருண்குமார் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் போலீசார் போதை பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    இதில் கலால் துணை ஆணையர் சத்தியப்பிரசாத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விஸ்வேஸ்வரய்யா, குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இ-வாகன விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் நடந்தது.
    • முடிவில் தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி எடுக்கபட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மற்றும் போச்சம்பள்ளி கோட்டத்தின் மின் பகிர்மான அலுவலங்கள் சார்பில், கிருஷ்ணகிரியில் இ-வாகன விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் நடந்தது. கிருஷ்ணகிரி மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாய மேரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மின்வாரிய உதவி செயற் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இ-வாகனத்தின் முக்கியத்துவம் குறித்தும், இ வாகனத்தின் பயன்பாட்டால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கி பேசினார்கள். முடிவில் தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி எடுக்கபட்டது.

    இதில் செயற்பொறியாளர் வேல், கிருஷ்ணகிரி கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் பவுன்ராஜ், போச்சம்பள்ளி கோட்ட செயற்பொறியாளர் இந்திரா மற்றும் மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

    • பெட்ரோல் பயன்பாடை குறைத்து சைக்கிள் பயன்படுத்த வேண்டும் என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்
    • ராயபுரம் வழியாக ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியை கடந்து மீண்டும் நஞ்சப்பா பள்ளியை அடைந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி சக்ஷம் அமைப்பு சார்பில் நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், அத்தியாவசிய செலவை கட்டுப்படுத்த அனைவரும் சைக்கிளை உபயோகிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்த சைக்கிள் ஊர்வலம் நடந்தது.

    இந்த சைக்கிள் ஊர்வலம் நஞ்சப்பா பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டு ராயபுரம் வழியாக ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியை கடந்து மீண்டும் நஞ்சப்பா பள்ளியை அடைந்தது.பசுமை- சுகாதாரத்தை பாதுகாப்போம், பெட்ரோல் பயன்பாட்டை குறைத்து சைக்கிள் பயன்படுத்த ஊக்கப்படுத்துவோம்என்கிற விழிப்புணர்வு பதாகைகளுடன் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பெட்ரோல் பயன்பாடை குறைத்து சைக்கிள் பயன்படுத்த வேண்டும் என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

    • தீ தொண்டு நாளையொட்டி நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் கடந்த 14-ந் தேதி முதல் ஒரு வாரம் தீ தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் 10 கிலோ மீட்டர் தொலைவு மாரத்தான் போட்டி நடந்தது.

    இதையடுத்து இன்று காலை வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தீயணைப்பு நிலையம் வரை விழிப்புணர்வு ஊர்வலம் இன்று நடந்தது.

    ஊர்வலத்தை தீயணைப்புத்துறை வடக்கு மண்டல துணை இயக்குனர் சரவணகுமார் தொடங்கி வைத்தார். வேலூர் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு சேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    தீயணைப்புத் துறையினர் என்சிசி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    ×