என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலக்கோடு அரசு பள்ளியில்  மாற்றுத்திறனாளி விழிப்புணர்வு ஊர்வலம்
    X

    விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.

    பாலக்கோடு அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளி விழிப்புணர்வு ஊர்வலம்

    • விழிப்புணர்வு ஊர்வலத்தை பேரூராட்சியை தலைவர் பி.கே. முரளி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • பதாகைகளை கையில் ஏந்தியபடி, முழக்கமிட்டு ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பாலக்கோடு,

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி விழிப்புணர்வு ஊர்வலத்தை பேரூராட்சியை தலைவர் பி.கே. முரளி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த ஊர்வலமானது பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலை ப்பள்ளியிலிருந்து தொடங்கி தக்காளி மண்டி, பை -பாஸ் சாலை, எம்.ஜிரோடு, பஸ் நிலையம், கடைவீதி வழியாக பள்ளியை சென்றடைந்தனர்.

    இந்த விழிப்பு ஊர்வ லத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தல், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை களுக்கான தீர்வு காணுதல் ஆகியவை பற்றி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகைகளை கையில் ஏந்தியபடி, முழக்கமிட்டு ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு சப்-இன்ஸ்பெக்டர் முருகன், அரசு மருத்துவமனை மருத்துவர் சித்ரா, பள்ளியின் குழு தலைவர், உறுப்பினர்கள், உதவி தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி நன்றி தெரிவித்தார்.

    Next Story
    ×