search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஹெல்மெட் அவசியம் குறித்து கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்
    X

    ஹெல்மெட் அவசியம் குறித்து கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்

    • நாட்டு நலத்திட்ட முகாம் நடந்தது
    • மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி மருத கேசரி மகளிர் கல்லூரி சார்பில் குன்னத்தூர் மற்றும் மண்டலவாடி பகுதியில் நாட்டு நல திட்ட மாணவர்களும், விதை குரல் தொண்டு நிறுவனமும் இணைந்து சிறப்பு முகாமை நடத்தியது.

    முகாமிற்கு கல்லூரி தலைவர் விமல்சந் ஜெயின், செயலாளர் லக்மிசந்த் ஜெயின், நிர்வாக குழு உறுப்பினர் ரமேஷ் குமார் ஜெயின் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நாட்டு பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் இன்பவள்ளி, கல்லூரி கல்வி ஆலோசகர் பேராசிரியர் பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர், மக்கள் தொடர்பு அலுவலர் சக்தி மாலா மற்றும் விதையின் குரல் தொண்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரபு ஆகியோர் வரவேற்றுப் பேசினர்.

    குன்னத்தூர் பகுதியில் நடைபெற்ற முகாமில் உள் அலங்காரம் மற்றும் கட்டமைப்பு துறை தலைவர் விஜயலட்சுமி மற்றும் மேகநாதன் ஆகியோர் சிறப்புறையாற்றினார். மண்டலவாடி முகாமில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை தலைவர் பவித்ரா தொடக்கி வைத்து பேசினார்.

    மேலும் இந்த முகாமில் நாட்டு நலத்திட்ட பணி மாணவிகள் பொன்னேரி தேசிய நெடுஞ்சாலையில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில் தலைக்கவசம் அணிதல், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை திருமணம் தடுப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற வாசகங்களை கையில் ஏந்தியவாறு வீதிவீதியாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு வீடு வீடாகச் சென்று குழந்தை தொழிலில் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது எனவும், பெண் கல்வியின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினர். மண்டலவாடி பகுதியைச் சேர்ந்த நாட்டு நல திட்ட பணி மாணவிகள் பொன்னேரியில் உள்ள பூங்காவிற்கு சென்று தூய்மைப்படுத்தினர். இந்த முகாமை நாட்டு நல திட்ட பணி ஒருங்கிணைப்பாளர் ஜெயஸ்ரீ, அருணா ஆகியோர் இணைந்து நடத்தினர்.

    Next Story
    ×