செய்திகள்

தேனி அருகே மாணவி உள்பட 2 இளம்பெண்கள் மாயம்

Published On 2019-04-25 11:54 GMT   |   Update On 2019-04-25 11:54 GMT
தேனி அருகே மாணவி உள்பட 2 பெண்கள் மாயமாகினர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:

கேரள மாநிலம் உடும்பன் சோலை மேப்பாறையைச் சேர்ந்தவர் பைரவன். இவரது மகள் பூவிதா. தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். பள்ளிகளில் தற்காலிக சான்றிதழ் வழங்கப்படுவதையொட்டி பூவிதா போடிக்கு வந்துள்ளார்.

ஆனால் மறுநாள்தான் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதனால் ரெங்கநாதபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி விட்டு சான்றிதழ் வாங்கி வருவதாக தந்தையிடம் கூறியுள்ளார். ஆனால் அங்கு செல்லவில்லை.

இது குறித்து பைரவனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் போடி தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

தேனி அருகே தேவாரம் டி.சிந்தலச்சேரியைச் சேர்ந்தவர் சுருளிராஜ் மகள் ஜாஸ்மின் (வயது 19). 10-வது வரை படித்து விட்டு தேயிலை தோட்டத்துக்கு கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஜாஸ்மின் கடைக்கு செல்வதாக கூறிச் சென்றார்.

இரவு வேகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேவாரம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜாஸ்மினை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News