மதுரையில் மாநகராட்சி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
மதுரை:
மதுரை தண்டல்காரன் பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 56). மதுரை மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
முருகேசனுக்கும், குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் வேதனை அடைந்த முருகேசன் கருவேலம் பட்டியில் உள்ள சகோதரர் வீட்டுக்குச் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் மதுரை மேலூர் அருகேயுள்ள வெள்ளிமலைப் பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் (40). இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
செல்வத்துக்கு குடிப்பழக்கம் உண்டு. இதன் காரணமாக அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் மேலும் தகராறு அதிகரித்தது.
இதில் வாழ்க்கையில் விரக்தியடைந்த செல்வம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.