செய்திகள்

லாஸ்பேட்டையில் டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2019-02-07 12:42 GMT   |   Update On 2019-02-07 12:42 GMT
லாஸ்பேட்டையில் விபத்தில் ஏற்பட்ட காயத்தால் அவதி அடைந்த டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

லாஸ்பேட்டை மகாவீர் நகர் முதல் மெயின்ரோட்டை சேர்ந்தவர் வின்சென்ட் சிபியோன், (வயது45). இவர் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு வாகன டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு மணியம்மை (40) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மணியம்மை தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வின்சென்ட் சிபியோன் வாகனத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராதவிதமாக காயம் அடைந்தார். இதையடுத்து காயம் காரணமாக வின்சென்ட் சிபியோன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை மணியம்மை வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். மகன், மகள் பள்ளிக்கு சென்றனர். வின்சென்ட் சிபியோன் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய அவர் காயம் காரணமாக அவதி அடைந்து வந்ததால் மனமுடைந்த வின்சென்ட் சிபியோன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

ஆஸ்பெட்டாஸ் கூரை கம்பியில் அவர் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்கினார். மாலையில் வேலைமுடிந்து வீடு திரும்பிய மணியம்மை கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வின்சென்ட் சிபியோன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர், ஏட்டு முருகதாஸ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News