செய்திகள்

திண்டுக்கல் அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

Published On 2018-11-30 11:45 GMT   |   Update On 2018-11-30 11:45 GMT
திண்டுக்கல் அருகே மணல் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் பகுதியில் சராசரிக்கும் குறைவாகவே மழை பொழிவு உள்ளதால் நீர்நிலைகள் பெரும்பாலும் வறண்டே காணப்படுகிறது. மேலும் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது.

ஓடை, குளம் ஆகியவற்றில் சமூக விரோத கும்பல் மணல் கடத்தி வருகிறது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. குடிநீருக்காகவும் பொதுமக்கள் அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. போலீசார் ரோந்து சென்று மணல் கொள்ளையர்களை கைது செய்தபோதும் மணல் கடத்தலை தடுக்க முயடிவில்லை.

இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் அபுதல்கா தலைமையில் போலீசார் கொசவபட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது மெயின் ரோடு பகுதியில் ஒரு டிராக்டர் வேகமாக வந்தது. அதனை நிறுத்தி சோதனையிட்டபோது மணல் கடத்தியது தெரிய வந்தது.

போலீசாரை கண்டதும் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். டிராக்டரை பறிமுதல் செய்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News