செய்திகள்

தளவாபாளையம் அருகே கிணற்றில் விழுந்து பெண் பலி

Published On 2018-11-23 15:03 GMT   |   Update On 2018-11-23 15:03 GMT
தளவாபாளையம் அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்த பெண் கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம், தளவாபாளையம் அருகே அய்யம் பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது  மனைவி மலையம்மாள் (வயது 55). இவர் அங்குள்ள பாம்பன் தோட்டத்தில் பெருமாள் என்பவரது நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.  

இந்நிலையில் மலையம்மாள் விவசாய நிலத்திற்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் விவசாய நிலத்திற்கு சென்று பார்த்த போது அங்குள்ள ஒரு கிணற்றில் மலையம்மாள் பிணமாக மிதந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் வேலாயுதம்பாளையம் தீயணைப்புவீரர்கள் விரைந்து சென்று மலையம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வேலாயும்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து மலையம்மாள் எப்படி கிணற்றில் விழுந்து இறந்தார் என்று விசாரித்து வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News