செய்திகள்

13 தமிழக மீனவர்களுடன் ஆழ்கடலில் தத்தளித்த விசைப்படகை கரைசேர்த்த கடலோர காவல்படை

Published On 2018-11-13 12:41 GMT   |   Update On 2018-11-13 12:41 GMT
விசைப்படகில் கோளாறு ஏற்பட்டதால் நடுக்கடலில் தத்தளித்த 13 தமிழக மீனவர்களை கடலோர காவல் படை இன்று கரைசேர்த்தது. #TamilNaduBoatRescue #IndianCoastGaurd #GajaCyclone
கன்னியாகுமரி:

வங்கக் கடலில் உருவாகி உள்ள கஜா புயல் நாளை மறுநாள் கடலூருக்கும்-பாம்பனுக்கும் இடையே கரை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கஜா புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடலுக்கு சென்ற மீனவர்களும் உடனடியாக கரை திரும்பும்படி அறிவிக்கப்பட்டது. அதன்படி மீனவர்கள் கரை திரும்பினர்.

இதற்கிடையே கன்னியாகுமரி மீனவர்கள் உள்ளிட்ட 13 மீனவர்கள் சென்ற விசைப்படகில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் நடுக்கடலில் அனைவரும் தத்தளித்தனர்.

மீனவர்கள் கரை திரும்பாதது பற்றி தகவல் அறிந்த இந்திய கடலோர காவல் படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீனவர்களைத் தேடினர்.



இந்நிலையில் நடுக்கடலில் தத்தளித்த தமிழக விசைப்படகை இந்திய கடல் பகுதியில் இருந்து 220 நாட்டிகல் மைல் தொலைவில் கடலோர காவல் படை இன்று கண்டுபிடித்தது. பின்னர் கடலோர காவல் படை கப்பல் உதவியுடன், அந்த விசைப்படகு லட்சத்தீவில் கரைசேர்க்கப்பட்டது. மீனவர்களும் பத்திரமாக கரை திரும்பினர். #TamilNaduBoatRescue #IndianCoastGaurd #GajaCyclone
Tags:    

Similar News