செய்திகள்

விருதுநகரில் பிளஸ்-1 மாணவி தங்கையுடன் மாயம்

Published On 2018-11-10 12:11 GMT   |   Update On 2018-11-10 12:11 GMT
பிளஸ்-1 மாணவி தங்கையுடன் மாயமாகி விட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர்:

விருதுநகர் எம்.மீனாட்சி புரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன்கள் சாலினி (வயது 17), மீனாட்சி (16).

திருத்தங்கல்லில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சாலினி பிளஸ்-1 படித்து வருகிறார். அதே பள்ளியில் மீனாட்சி 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

தீபாவளி பண்டிகைக்கு மறுநாள், பள்ளியில் சிறப்பு வகுப்பு இருப்பதாக சகோதரிகள் இருவரும் வீட்டில் கூறிச் சென்றனர். அதன் பிறகு அவர்கள் மாலையில் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் 2 பேர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இது குறித்து ஆமத்தூர் போலீசில், சகோதரிகளின் தாயார் குருவத்தாய் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அக்காள்-தங் கையை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News