செய்திகள்
ஒட்டன்சத்திரத்தில் மர வியாபாரி மர்ம மரணம்
ஒட்டன்சத்திரத்தில் மர்மமான முறையில் இறந்த மர வியாபாரி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே பொட்டிக்காம்பட்டியை சேர்ந்தவர் சின்னான் (வயது50). மர வியாபாரம் செய்து வருகிறார். வழக்கமாக ஒட்டன்சத்திரத்திற்கு வேலை நிமித்தமாக சென்று வருவார். இதேபோல் நேற்று மாலை ஒட்டன்சத்திரம் வந்துள்ளார்.
பஸ்நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பறைக்கு சென்றுள்ளார். திடீரென மயக்கம் ஏற்பட்டு கழிவறையிலேயே விழுந்து கிடந்துள்ளார். சுத்தம் செய்ய சென்ற பணியாளர்கள் அவரை எழுப்ப முயன்றபோது சின்னான் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சின்னானின் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் சின்னான் எவ்வாறு இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.