செய்திகள்

சமயநல்லூர் அருகே டிரான்ஸ்பார்மர் பழுது பார்த்த மின் ஊழியர் பலி

Published On 2018-10-17 10:15 GMT   |   Update On 2018-10-17 10:15 GMT
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே டிரான்ஸ்பார்மர் பழுது பார்த்த மின் ஊழியர் கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.
மதுரை:

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள ஊர்மெச்சிக்குளத்தைச் சேர்ந்தவர் சின்னையா (வயது 50). இவர் மின் வாரிய ஊழியர். நேற்று முன்தினம் பொம்மிநாயக்கன்பட்டியில் உள்ள விவசாய தோட்டத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரை இவர் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென டிரான்ஸ்பார்மரில் இருந்து தவறி கீழே இருந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.

இதில் தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் அடைந்த சின்னையா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சின்னையா, மனைவி பஞ்சு கொடுத்த புகாரின் பேரில் பாலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News