வெள்ளியங்கிரி மலைக்கு சென்ற சென்னை என்ஜினீயர் மரணம்
கோவை:
சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் நேதாஜி(வயது 39). என்ஜினீயர். இவர் தனது நண்பர்கள் கவுதம், பன்னீர்செல்வம் ஆகியோருடன் நேற்று கோவை வந்தார். பின்னர் காரில் பூண்டி மலையடிவாரத்துக்கு சென்ற அவர்கள் 7 மலை ஏறி வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க சென்றனர்.
இவர்கள் 3-வது மலையில் சென்று கொண்டிருந்த போது மழை பெய்தது. இதனால் குளிர் காற்றும் வீசியது. அப்போது நேதாஜிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே நண்பர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர். எனினும் சிறிது நேரத்தில் அவர் மூச்சு திணறி இறந்தார்.
இதுகுறித்து ஆலாந்துறை போலீசில் புகார் செய்யப்பட் டது. இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது கன மழை பெய்ததால் நேதாஜி உடலை உடனடியாக மலை அடிவாரத்துக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது.
பின்னர் மலை கிராம மக்கள் உதவியுடன் நேதாஜி உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். வனத்துறை தடையை மீறி இவர்கள் மலை ஏறியதாக கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.