செய்திகள்
தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு
தஞ்சை அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்த வல்லம் தோழகிரிபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்முருகன். குருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி உஷா (வயது 33).
தஞ்சையை அடுத்த வல்லம் தோழகிரிபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்முருகன். குருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி உஷா (வயது 33).
சம்பவத்தன்று இரவு செந்தில்முருகன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது காற்றுக்காக வீட்டின் பின்பக்க கதவை பூட்டாமல் அவர் சாத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க வாசல் வழியாக உள்ளே புகுந்து உஷாவின் கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்தனர். இதைக்கண்டு திடுக்கிட்ட அவர் திருடன், திருடன் என சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்களும், அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் 6 பவுன் நகையுடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து செந்தில்முருகன் வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பெண்ணிடம் நகையை பறித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.