செய்திகள்

நாமக்கல் கார் பட்டறை அதிபர் கொலை: உறவினர் சிக்கினார்

Published On 2018-09-28 14:17 GMT   |   Update On 2018-09-28 16:12 GMT
கார் பட்டறை அதிபர் கொலையில் தொடர்புடைய உறவினர் போலீசாரிடம் சிக்கினார். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.

கொல்லிமலை:

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த துத்திக்குளம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 49). இவர் முதலைப்பட்டி புதூரில் கார் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு வீட்டின் மாதேஸ்வரன் கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து சேந்த மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், துறையூரில் வசித்து வரும் மாதேஸ்வரனின் சகோதரி சாந்தியின் மகன்கள் ராதாகிருஷ்ணன், சதீஸ் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து தீர்த்துக் கட்டியது தெரியவந்தது. 

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சதீஸ் போலீசாரிடம் சிக்கினார். அவரது அண்ணன் மற்றும் கொலையில் தொடர்புடைய கல்லூரி மாணவர் ஒருவரையும் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News