செய்திகள்

பெற்றோர் திட்டியதால் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2018-09-25 09:56 GMT   |   Update On 2018-09-25 09:56 GMT
திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் அவரது உடலை கைபற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலை பொன்னுருவி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மகன் ஆண்டிச்சாமி (வயது21). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 2 வாரமாக கல்லூரிக்கு செல்லாமல் நண்பர்களுடன் சுற்றி வந்தார். இதனால் அவரது தந்தை கல்லூரிக்கு செல்லாவிட்டால் தன்னுடன் வந்து தோட்ட வேலை செய்யுமாறு கூறினார்.

இதனால் வேதனையடைந்த ஆண்டிச்சாமி தோட்டத்திலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அவரது பெற்றோர் திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரது உடலை கைபற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News