செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே மணல் கடத்திய 4 பேர் கைது
ஆண்டிப்பட்டி அருகே டிராக்டரில் மணல் கடத்திய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரம் பகுதியில் அதிக அளவு ஓடை மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
பலர் விவசாயத்தை கைவிட்டு வேறு தொழில்களுக்கு சென்று விட்டனர். மணல் கொள்ளையால் குடிநீர் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. ஆண்டிப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் யாழிசை செல்வன் தலைமையிலான போலீசார் கிழக்கு ஓடை பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது வேகமாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் அரசுக்கு சொந்தமான ஓடையில் இருந்து 60 சாக்குமூட்டையில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.
டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக டி.சுப்புலாபுரத்தை சேர்ந்த தங்கமுத்து, காசிராஜன், ஜெயக்குமார், ராமசாமி ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரம் பகுதியில் அதிக அளவு ஓடை மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
பலர் விவசாயத்தை கைவிட்டு வேறு தொழில்களுக்கு சென்று விட்டனர். மணல் கொள்ளையால் குடிநீர் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. ஆண்டிப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் யாழிசை செல்வன் தலைமையிலான போலீசார் கிழக்கு ஓடை பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது வேகமாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் அரசுக்கு சொந்தமான ஓடையில் இருந்து 60 சாக்குமூட்டையில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.
டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக டி.சுப்புலாபுரத்தை சேர்ந்த தங்கமுத்து, காசிராஜன், ஜெயக்குமார், ராமசாமி ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.