செய்திகள்

அண்ணாநகரில் கார் டயர்களை கழற்றி திருடிச்சென்ற கும்பல்

Published On 2018-09-16 10:28 GMT   |   Update On 2018-09-16 10:28 GMT
அண்ணாநகரில் கார் டயர்களை கழற்றி திருடிச்சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். #Robbery

சென்னை:

எழும்பூர், அண்ணாநகரில் காரில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

அயனாவரத்தை சேர்ந்தவர் யோகேஸ்வரி. திருவண்ணாமலையில் அரசு டாக்டராக பணியாற்றி வருகிறார்.

நேற்று எழும்பூரில் உள்ள வேனல்ஸ் ரோட்டில் காரை நிறுத்திவிட்டு சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது கார் கண்ணாடியை உடைத்து ரூ.10 ஆயிரம் பணம் திருடப் பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து எழும்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

அண்ணாநகர் வீட்டுவசதி வாரிய வளாகத்தில் பஞ்சாட் சரம் என்பவர் தனது காரை நிறுத்தி இருந்தார்.

இந்த கார் கண்ணாடியை உடைத்து ஸ்பீக்கர், பேட்டரியை திருடியதுடன் காரின் 4 டயர்களையும் கழற்றி எடுத்து சென்றுவிட்டனர். ‘ஸ்டெப்னி’ டயரையும் கொண்டு சென்றுவிட்டனர்.

இதுகுறித்து அண்ணாநகர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News