செய்திகள்

தருமபுரி மாவட்டத்தில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2018-09-15 17:14 GMT   |   Update On 2018-09-15 17:14 GMT
தருமபுரி மாவட்டத்தில் நேற்று மழை பெய்ததால் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கு மேலாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. மேலும் தருமபுரி மாவட்டம் விவசாய பூமி என்பதால் மழை இல்லாமல் நிலம் ஈரப்பதம் அற்று காணப்பட்டது. இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் இருந்து வந்தனர். 

மேலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தருமபுரி மாவட்டம் முழுவதும் பரவலான மழை பெய்து வருகிறது. இதை போன்று நேற்றும் தருமபுரி மாவட்டம் முழுவதும் பரவலான மழை பெய்தது. மழையின் அளவு வருமாறு:-

அதிகபட்சமாக ஒகேனக்கல்லில் 42மி.மீ. மழையும், பாப்பிரெட்டிபட்டியில் 40.2 மி.மீ. மழையும், அரூரில் 5.2 மி.மீ. மழையும், தருமபுரியில் 4மி.மீ. மழையும் மற்றும் பென்னாகரத்தில் 1.5 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இதனால் வெப்பம் தனிந்து குளிர்ந்த காற்று வீசியது. 

இந்த 2 நாட்களாக பெய்த மழை பெரிய அளவு விவசாயம் செய்யக்கூடிய கரும்பு, மஞ்சள், பருத்தி, மற்றும் நெல் விவசாயிகளுக்கு உதவிகரமாக இல்லாவிட்டாலும், சிறிய அளவு விவசாயம் செய்யக்கூடிய காய்கறி மற்றும் கீரை விவசாயிகளுக்கு இந்த மழையானது மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News