செய்திகள்

ஆரணி அருகே பெயிண்ட் கடையில் தீ விபத்து- ரூ.3 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

Published On 2018-09-15 09:55 GMT   |   Update On 2018-09-15 09:55 GMT
ஆரணி அருகே பெயிண்ட் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
ஆரணி:

ஆரணி லட்சுமி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் பெயிண்ட் கடை மற்றும் குடோன் ஒன்றை வாடைகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மணிகண்டன் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது குடோனில் மின் கசிவு ஏற்பட்டு தீபற்றி எரிந்து புகை மூட்டம் வெளியே வந்து கொண்டிருந்தது.

இதனை கண்ட அப்பகுதியினர் இது குறித்து மணிகண்டனுக்கு தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த அவர் ஆரணி, மற்றும் சேத்துப்பட்டு தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் தீ மளமளவென பரவி குடோனில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. பின்னர் தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News