செய்திகள்

பொது விநியோக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2018-09-14 15:01 GMT   |   Update On 2018-09-14 15:01 GMT
தமிழ்நாடு பொது விநியோக ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகள் வலியுறுத்தி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
சேலம்:

தமிழ்நாடு பொது விநியோக ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகள் வலியுறுத்தி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட பொருப்பாளர் குமார் வரவேற்றார். மாநில தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மகளில் குழுக்களால் நடத்தப்படும் நியாயவிலைக்கடைகளில் கூட்டுறவுதுறையின் நிர்மூலமாக்கும் போக்கு தவிர்க்கப்படவேண்டும்.

இதனை வரைமுறைபடுத்த தகுதியான குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் நாகராஜன் நன்றி கூறினார். இதில் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News