செய்திகள்

செல்போன் மூலம் கொலை மிரட்டல்: காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

Published On 2018-09-14 13:42 GMT   |   Update On 2018-09-14 13:42 GMT
செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததால் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு மதுரை மாநகர் போலீசில் தஞ்சம் அடைந்தது.
மதுரை:

சிவகங்கை மாவட்டம், காற்றாடைகுளத்தைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மகள் தீபா. கல்லூரி மாணவியான இவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் காதலித்து வந்தனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தீபா வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து கடந்த 7-ந் தேதி வீட்டை விட்டு தீபா வெளியேறினார். பின்னர் சுரேஷ்-தீபா நிலக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்தனர்.

இந்த நிலையில் இன்று மதியம் மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திற்கு காதல் ஜோடி வந்தனர். எங்களுக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. எனவே பாதுகாப்பு வழங்ககோரி மனு கொடுத்தனர். #tamilnews
Tags:    

Similar News