செய்திகள்

திருப்பூர் அருகே தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதந்த சிறுமி

Published On 2018-09-10 10:24 GMT   |   Update On 2018-09-10 10:24 GMT
திருப்பூர் அருகே தண்ணீர் தொட்டியில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட சிறுமி, கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே உள்ள சாமளாபுரம் தோட்டத்து பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி தமிழ் இசக்கி. இவர்களது மகள் சுகன்யா ஸ்ரீ (வயது 2½).

இன்று காலை வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் சிறுமி சுகன்யா ஸ்ரீ பிணமாக மிதந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நாகராஜ் உடனடியாக குழந்தையை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார்.

குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் சுகன்யா ஸ்ரீ ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் இது குறித்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் உடனடியாக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சுகன்யா ஸ்ரீயின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை கொலை செய்யப்பட்டதா? அல்லது விளை£டிய போது தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்ததா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News