செய்திகள்

ராயப்பேட்டையில் அ.தி.மு.க. மகளிர் அணி நிர்வாகி வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2018-09-09 10:33 GMT   |   Update On 2018-09-09 10:33 GMT
ராயப்பேட்டையில் அ.தி.மு.க. மகளிர் அணி நிர்வாகி வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

ராயப்பேட்டையில் அ.தி.மு.க. மகளிர் அணி நிர்வாகி வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயப்பேட்டையை சேர்ந்தவர் காமாட்சி. அ.தி.மு.க. மகளிர் அணியில் நிர்வாகியாக இருக்கிறார். உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 2 நாட்களாக ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றார்.

அப்போது வீட்டில் யாரும் இல்லை. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய போது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

ரூ.50 ஆயிரம் ரொக்க பணமும் திருடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காமாட்சி ராயப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
Tags:    

Similar News