செய்திகள்

தலைவாசல் அருகே குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு

Published On 2018-09-08 12:23 GMT   |   Update On 2018-09-08 12:23 GMT
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே குடிநீர் குழாய் இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்தனர்.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள புளியங்குறிச்சி பகுதியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மேட்டூர் ஆத்தூர் குடிநீர் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த குடிநீர் குழாயில் அனுமதி பெறாமல் சிலர் குழாய் இணைப்பு துண்டித்து அவர்கள் தேவைக்கு இணைப்பை எடுத்து தண்ணீர் எடுத்து வந்தனர்.

இதனை பொதுமக்கள் கண்காணித்து தொடர்ந்து புகார் கொடுத்து வந்தனர். புகாரின் அடிப்படையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேரில் சென்று அனுமதி பெறாமல் இணைக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பை துண்டித்தனர்.

Tags:    

Similar News