செய்திகள்

திருவையாறு அருகே விபத்தில் வாலிபர் பலி

Published On 2018-09-07 10:20 GMT   |   Update On 2018-09-07 10:20 GMT
திருவையாறு அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

திருவையாறு:

தஞ்சாவூர் வண்ணாரப்பேட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் விக்னேஷ் (வயது24).

இவர் நேற்று மாலை 6 மணியளவில் இருசக்கர வாகனத்தில் திருவையாறு வந்து விட்டு தஞ்சாவூர் நோக்கிச் செல்லும்போது நடுக்கடை மெயின் ரோடில் எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவக்கல்லூரியில் சேர்த்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சை பலனின்றி விக்னேஷ் இறந்தார் .

இது குறித்து திருவையாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News