செய்திகள்

மண்ணச்சநல்லூர் அருகே விபத்து - ஆசிரியர் பலி

Published On 2018-09-05 11:49 GMT   |   Update On 2018-09-05 11:49 GMT
மண்ணச்சநல்லூர் அருகே விபத்தில் ஆசிரியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

மண்ணச்சநல்லூர்:

கன்னியாகுமரி பெருமாள் குளத்தை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 27), ஆசிரியர். இவர் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் சென்னைக்கு காரில் புறப்பட்டு சென்றனர்.

காரை டிரைவர் செல்வம் ஓட்டிச்சென்றார். அதிகாலை திருச்சி சிறுகனூர் பகுதியில் செல்லும் போது அந்த வழியாக சென்ற பஸ்சும், காரும் மோதின. இதில் 3பேரும் காயமடைந்தனர்.

பலத்தகாயமடைந்த கருணாகரன் இறந்தார். இந்த விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News