செய்திகள்
தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கு - 2 பேராசிரியர்களிடம் விசாரணை நிறைவு
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக பேராசிரியர் விஜயகுமார், உதவி பேராசிரியர் சிவக்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணை முடிவடைந்தது. #AnnaUniversity #RevaluationScam
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா மற்றும் பேராசிரியர் விஜயகுமார், உதவி பேராசிரியர் சிவக்குமார் உள்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு தலைமை அலுவலகத்தில் பேராசிரியர் விஜயகுமார், உதவி பேராசிரியர் சிவக்குமார் ஆகியோரிடம் நேற்று 3-வது நாளாக விசாரணை நடைபெற்று முடிவடைந்தது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாடு அலுவலர் உமாவுக்கு சம்மன் அனுப்பி அவரிடம் இந்த வார இறுதிக்குள் விசாரணை நடத்தப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. #AnnaUniversity #RevaluationScam
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா மற்றும் பேராசிரியர் விஜயகுமார், உதவி பேராசிரியர் சிவக்குமார் உள்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு தலைமை அலுவலகத்தில் பேராசிரியர் விஜயகுமார், உதவி பேராசிரியர் சிவக்குமார் ஆகியோரிடம் நேற்று 3-வது நாளாக விசாரணை நடைபெற்று முடிவடைந்தது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாடு அலுவலர் உமாவுக்கு சம்மன் அனுப்பி அவரிடம் இந்த வார இறுதிக்குள் விசாரணை நடத்தப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. #AnnaUniversity #RevaluationScam