செய்திகள்

மதுரை சிந்தாமணியில் மண்சுவர் சரிந்து மூதாட்டி பலி

Published On 2018-09-01 09:57 GMT   |   Update On 2018-09-01 09:57 GMT
மதுரை சிந்தாமணியில் மண்சுவர் சரிந்து மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவனியாபுரம்:

அவனியாபுரம் போலீஸ் சரகத்திக்குட்பட்ட சிந்தாமணி கஜேந்திரபுரத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி அங்கம்மாள் (வயது 90), நேற்று மாலையில் சிந்தாமணி பகுதியில் பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக அங்கம்மாள் குடியிருக்கும் ஓட்டு வீட்டில் சுவர் பலம் இழந்தாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று காலை அங்கம்மாள் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மண் சுவர் இடிந்து அங்கம்மாள் மீது சரிந்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அங்கம்மாள் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவனியாபுரம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News