செய்திகள்
சங்கரன்கோவிலில் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மலையில் குடியேறிய கிராமமக்கள்
சங்கரன்கோவில் அருகே ஆனையூர் பகுதியில் உள்ள கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கிராமமக்கள் இன்று மலையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில்:
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆனையூர் கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஒரு கல்குவாரி செயல்பட்டு வந்தது. இதன் லைசென்சு புதுப்பிக்கப்படாததால் சில ஆண்டுகளாக கல்குவாரி செயல்படாமல் இருந்தது.
இந்நிலையில் இந்த குவாரியின் லைசென்சு சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டதையடுத்து குவாரியை திறக்க ஆரம்பகட்ட பணிகள் தொடங்கின. இதைத்தொடர்ந்து இந்த குவாரியை திறக்கக்கூடாது என அப்பகுதியினர் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். அப்போது தாசில்தார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி ஆனையூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானவர்கள் இன்று ஆனையூர் மலையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் சங்கரன்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆனையூர் கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஒரு கல்குவாரி செயல்பட்டு வந்தது. இதன் லைசென்சு புதுப்பிக்கப்படாததால் சில ஆண்டுகளாக கல்குவாரி செயல்படாமல் இருந்தது.
இந்நிலையில் இந்த குவாரியின் லைசென்சு சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டதையடுத்து குவாரியை திறக்க ஆரம்பகட்ட பணிகள் தொடங்கின. இதைத்தொடர்ந்து இந்த குவாரியை திறக்கக்கூடாது என அப்பகுதியினர் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். அப்போது தாசில்தார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி ஆனையூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானவர்கள் இன்று ஆனையூர் மலையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் சங்கரன்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.