செய்திகள்

திருப்பூர் மாநகராட்சியில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை- புதிய கமி‌ஷனர் சிவகுமார் தகவல்

Published On 2018-08-24 10:37 GMT   |   Update On 2018-08-24 10:37 GMT
திருப்பூர் மாநகராட்சியில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று புதிய கமி‌ஷனர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சியில் கமி‌ஷனராக இருந்த அசோகன் பதவி உயர்வு பெற்று சென்னைக்கு மாறுதலாகி சென்றார். இதனையடுத்து திருப்பூர் மாநகராட்சியின் புதிய கமி‌ஷனராக சிவகுமார் நியமிக்கப்பட்டார். அவர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து கமி‌ஷனராக பொறுப்பேற்றுக் கொண்டார் பின்னர் அவர் கூறியதாவது:-

திருப்பூர் மாநகராட்சியில் தேவைகளை கண்டறிந்து, வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து அதன் அடிப்படையில் பொதுமக்களின் தேவைக்கேற்ப அத்தியாவசிய அவசரத்தேவைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அடிப்படை வசதிகளான சாக்கடை வசதி, குடிநீர் வசதி, கல்வி வசதி, சுகாதாரம், கழிப்பிட வசதி போன்ற பல்வேறு அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து திருப்பூர் மாநகராட்சியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

புதிதாக பதவியேற்று கொண்ட கமி‌ஷனருக்கு மாநகர பொறியாளர் ரவி, செயற்பொறியாளர் திருமுருகன், உதவி கமி‌ஷனர்கள் நாராயணன், வாசுகுமார், செல்வநாயகம், முகமது சபியுல்லா, கண்ணன், வருவாய் ஆய்வாளர் தங்கவேல் ராஜன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News