செய்திகள்
வாழப்பாடியில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு காமிரா
குற்றச்செயல்களை கண்காணிக்க வாழப்பாடி பேரூராட்சியில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்த முடிவு செய்யப்பட்டது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பொது மக்கள் கூடும் முக்கிய இடங்களில் குற்றச்செயல்களை தவிர்க்க கண்காணிப்பு காமிரா அமைப்பது குறித்து காவல்துறை மற்றும் வணிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது.
வாழப்பாடி காவல் நிலையத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் சூர்யமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாழப்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வாழப்பாடி பேரூராட்சியில், பொதுமக்கள் கூடும் பேருந்து நிலையம், சந்தைப்பேட்டை, கடைவீதி, பேளூர் பிரிவு சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தி, குற்றச்செயல்களை தவிர்ப்பது குறித்து, வணிகர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது.
கூட்டத்தில், பொதுமக்கள் வணிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்களிப்புடன் முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்த முடிவு செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பொது மக்கள் கூடும் முக்கிய இடங்களில் குற்றச்செயல்களை தவிர்க்க கண்காணிப்பு காமிரா அமைப்பது குறித்து காவல்துறை மற்றும் வணிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது.
வாழப்பாடி காவல் நிலையத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் சூர்யமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாழப்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வாழப்பாடி பேரூராட்சியில், பொதுமக்கள் கூடும் பேருந்து நிலையம், சந்தைப்பேட்டை, கடைவீதி, பேளூர் பிரிவு சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தி, குற்றச்செயல்களை தவிர்ப்பது குறித்து, வணிகர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது.
கூட்டத்தில், பொதுமக்கள் வணிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்களிப்புடன் முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்த முடிவு செய்யப்பட்டது.