செய்திகள்

மன்னார்குடியில் மெக்கானிக் கடையில் ரூ.63 ஆயிரம்- மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2018-08-17 10:16 GMT   |   Update On 2018-08-17 10:16 GMT
மன்னார்குடி அருகே மெக்கானிக் கடை பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன்னார்குடி:

மன்னார்குடி அருகே குமாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்டு (வயது 45). இவர் தனது வீடு அருகே மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். மேலும் இருசக்கர வாகனங்களை வாங்கி, விற்றும் வருகிறார். இந்நிலையில் நேற்று மோட்டார் சைக்கிள் விற்ற பணம் ரூ.63 ஆயிரத்தை கல்லாப்பெட்டியில் வைத்துவிட்டு இரவு வீட்டுக்கு புறப்பட்டார்.

பின்னர் இன்று காலை ரிச்சர்டு கடைக்கு வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டார். பின்னர் கடைக்குள் சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ.63 ஆயிரம் பணம், மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் திருட்டு போய் இருந்தது. இதுபற்றி கோட்டூர் போலீசில் ரிச்சர்டு புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருகுமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News