செய்திகள்

மதுரையில் பஸ் மோதி மூதாட்டி பலி

Published On 2018-08-17 09:21 GMT   |   Update On 2018-08-17 09:21 GMT
மதுரையில் பஸ் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை பெரியார் பஸ் நிலையத்துக்கு இன்று காலை 50 வயது மதிக்கத்தக்க மூதாட்டி வந்தார். அவர் அங்கிருந்து ரெயில் நிலையம் செல்வதற்காக எல்லீஸ் நகர் மேம்பாலத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது கோவில் பாப்பாகுடியில் இருந்து பெரியார் பஸ் நிலையத்துக்கு அதிவேகமாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரிய வில்லை.

விபத்து பற்றி அறிந்ததும் கரிமேடு போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த மூதாட்டி யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News