செய்திகள்

மரக்காணம் அருகே விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2018-08-16 11:50 GMT   |   Update On 2018-08-16 11:50 GMT
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே குடும்ப தகராறு காரணமாக விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
மரக்காணம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த நகர் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (வயது 56) விவசாயி.

இவர் நேற்று மதியம் அந்த பகுதியில் விவசாய நிலத்துக்கு சென்று வருவதாக கூறி சென்றார்.

நிலத்துக்கு சென்ற கணபதி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் விவசாய நிலத்துக்கு சென்று பார்த்தனர்.

அங்குள்ள மோட்டார் கொட்டகையில் கணபதி வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது அருகில் வி‌ஷப்பாட்டில் ஒன்றும் கிடந்தது.

இது குறித்து பிரம்மதேசம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கணபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் கணபதி குடும்பத்தகராறு காரணமாக வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது.
Tags:    

Similar News