கீழக்கரையில் பேராசிரியர் வீட்டுக்குள் புகுந்து நகை-பொருட்கள் கொள்ளை
கீழக்கரை:
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் விஜயராஜ் (வயது 44). இவர் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணி யாற்றி வருகிறார். இவரது மனைவியும் அதே கல்லூரியில் உதவி பேராசி ரியையாக உள்ளார்.இவர்கள் கீழக்கரை கோகுல் நகரில் தங்கி உள்ளனர்.
வார விடுமுறை நாட்களில் கணவன், மனைவி சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதன்படி கடந்த 11-ந் தேதி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு கோவில்பட்டிக்கு சென்று விட்டனர்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்து வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 5 தங்க நாணயங்கள், 1 பவுன் செயின், 2 ஜோடி வெள்ளி கொலுசுகள், 5 வெள்ளி குத்து விளக்குகள், செல்போன், விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.
விடுமுறை முடிந்து கீழக்கரை திரும்பிய விஜயராஜ் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகை-பொருட்கள் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் கீழக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.