செய்திகள்

மீஞ்சூர் அருகே லாரியில் மணல் கடத்தல் - 2 பேர் கைது

Published On 2018-08-14 06:37 GMT   |   Update On 2018-08-14 06:37 GMT
மீஞ்சூர் அருகே லாரியில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னேரி:

மீஞ்சூர் அருகே உள்ள நெய்தவாயல் ஏரியில் மணல் கடத்தப்படுவதாக மீஞ்சூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் அங்குரோந்து பணியில் ஈடுபட்ட போது இரண்டு லாரியில் மணல் கடத்திய விழுப்புரத்தை சேர்ந்த சங்கர், மீஞ்சூர்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. எழில் என்பவர் தப்பி ஓடிவிட்டார்.

Tags:    

Similar News