செய்திகள்

மரக்காணம் அருகே பாம்பு கடித்து வாலிபர் உயிரிழப்பு

Published On 2018-08-10 09:45 GMT   |   Update On 2018-08-10 09:45 GMT
மரக்காணம் அருகே பாம்பு கடித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரக்காணம்:

மரக்காணம் அருகே உள்ள தானிமேடு பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 16). இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த பாம்பு ஒன்று திடீரென பூபதியை கடித்தது. இதில் பூபதி வாயில் நுரை தள்ளியவாறு மயங்கினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பூபதி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மரக்காணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News