செய்திகள்
பாண்டிபஜாரில் பிறந்த நாள் விழாவில் மோதல் - வாலிபருக்கு கத்திக்குத்து
தி.நகர் பாண்டிபஜாரில் பிறந்தநாள் விழாவின் போது ஏற்பட்ட மோதலில் வாலிபர் கத்தியால் குத்தப்பட்டார்.
சென்னை:
தி.நகர் அபிபுல்லா ரோட்டில் உள்ள கிளப் ஒன்றில் நேற்று இரவு பிறந்த நாள் நிகழ்ச்சி நடந்தது. காசிமேட்டை சேர்ந்த சுராஜ். தனது நண்பர்களுடன் இதில் பங்கேற்றார்.
அப்போது விழாவுக்கு வந்திருந்தவர்கள் மது குடித்தனர். போதையில் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் பேட்ரிக், போண்டாமணி உள்ளிட்ட 5 பேர் ஒன்று சேர்ந்து சுராஜை சரமாரியாக கத்தியால் குத்தினர்.
கிளப்பில் இருந்து குண்டுக்கட்டாக அவரை வெளியே தூக்கி வந்து சுராஜை பின்னங்கழுத்து, வயிறு, நெஞ்சு ஆகிய இடங்களில் குத்தினர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
அங்கிருந்தவர்கள் சுராஜை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை ராஜிவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் சுராஜ் மீது காசிமேடு போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளன. இதன் பின்னணியில் அவர் தாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தி.நகர் அபிபுல்லா ரோட்டில் உள்ள கிளப் ஒன்றில் நேற்று இரவு பிறந்த நாள் நிகழ்ச்சி நடந்தது. காசிமேட்டை சேர்ந்த சுராஜ். தனது நண்பர்களுடன் இதில் பங்கேற்றார்.
அப்போது விழாவுக்கு வந்திருந்தவர்கள் மது குடித்தனர். போதையில் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் பேட்ரிக், போண்டாமணி உள்ளிட்ட 5 பேர் ஒன்று சேர்ந்து சுராஜை சரமாரியாக கத்தியால் குத்தினர்.
கிளப்பில் இருந்து குண்டுக்கட்டாக அவரை வெளியே தூக்கி வந்து சுராஜை பின்னங்கழுத்து, வயிறு, நெஞ்சு ஆகிய இடங்களில் குத்தினர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
அங்கிருந்தவர்கள் சுராஜை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை ராஜிவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் சுராஜ் மீது காசிமேடு போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளன. இதன் பின்னணியில் அவர் தாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.