செய்திகள்

மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி பெயிண்டர் பலி

Published On 2018-08-01 09:08 GMT   |   Update On 2018-08-01 09:08 GMT
மயிலாடுதுறை அருகே இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் பெயிண்டர் பலியானார்.
மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் தரங்கம்பாடி வடகரை இடையாளூர் மேலத் தெருவை சேர்ந்தவர் பசிரூதீன் (வயது 38), பெயிண்டர்.

இவர் இன்று காலை சீர்காழியில் இருந்து மயிலாடுதுறைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது வைத்தீஸ்வரன் கோவில் அருகே சென்ற போது 2 மாணவர்கள் லிப்ட் கேட்டனர்.

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் விக்னேஷ் (15), விஜயகுமார் (15) ஆகியோர் பசிரூதீனுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர்.

அவர்கள் மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறை அருகே சேந்தகுடி என்ற இடத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ் மோதியது. இதில் பசிரூதீன் சம்பவ இடக்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

மேலும் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்ற விக்னேஷ், விஜயகுமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து பற்றி மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்தில் பலியான பசிரூதீன் உடலை பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News